யாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் முகமாக அச்சுவேலிப் பகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் முதற்கட்டமாக ஐந்து ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய ஏற்பாடுகளை இலங்கை முதலீட்டுச் சபையின் வடபிராந்திய அலுவலகம் மெற்கொண்டுள்ளது. கைத்தொழில் அபிவிருத்திச்சபையின் அனுமதியுடன் அச்சவேலியில் 25 எக்கரில் இம்முதலீட்டு ஊக்கவிப்பு வலயம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.