ஊடகவியல்: ரூபன் மரியாம்பிள்ளையின் ஊடகவியல் நூல்கள் ஒரு அறிமுகம் : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

Rubanmariam_Pillai இக்கட்டுரை ஊடகவியல்துறையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு, அத்துறையில் அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்ட எட்டு நூல்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டு உள்ளது.

இவை அனைத்தையும் எழுதியவர் அருட்திரு ரூபன் மரியாம்பிள்ளை. சில்லாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை 1959 ஜுன் மாதம் 24ம் திகதி பிறந்தவர். சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் 1965,ல் தன் ஆரம்பக் கல்வியையும், பின்னர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் 1972ல் தன் உயர் கல்வியையும் பெற்றவர்.

கண்டி மாவட்டத்தின் அம்பிட்டிய தேசிய இறையியல் கல்லூரியில் 1982லும், புனித பிரான்சிஸ் குருத்துவக் கல்லூரியில் 1984லும் தன் இறையியல் கல்வியை மேற்கொண்டவர். 1986முதல் யாழ். மறைமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கக் குருவானவராக பணியாற்றுபவர். 1979ஆம் ஆண்டு மௌன ஊர்வலம் என்ற பாதுகாவலன் பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை மூலம் பத்திரிகைத்துறைக்கு அறிமுகமானவர் இவர். அன்றிலிருந்து இன்றுவரை ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பாதுகாவலன் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

பத்திரிகைத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்ற ரூபன் மரியாம்பிள்ளை அடிகளார், யாழ்ப்பாணத்தில் மிக நீண்ட வரலாறு கொண்ட பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் பாதுகாவலன் பத்திரிகையில் ஆசிரியராக இருந்தபோதே அப்பத்திரிகை 2000ஆம் ஆண்டிற்கான சிறந்த வடிவமைப்புக்கொண்ட தமிழ்ப் பத்திரிகைக்கான தேசிய விருதினைப் பெற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஈழநாடு, முரசொலி, போன்ற பத்திரிகைகளில் தவக்காலச் சிந்தனைகள் என்ற பகுதியின் வழியாக அறிமுகமான இவர் ஈழநாடு பத்திரிகையில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். நான் என்ற உளவியல் சஞ்சிகை, இறையியல் கோலங்கள், புதிய உலகம், மற்றும் மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தொண்டன் போன்றவற்றிலும் இவரது பல ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. உதயன் பத்திரிகையில் ஏறக்குறைய 30க்கும் அதிகமான சமயக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் சான்றிதழ் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர், பின்னர் தன் பத்திரிகைத் துறைக்கான பட்டப்பின் படிப்பையும், முதுகலைமாணிப் பட்டத்தையும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டவர்.

தற்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் ஊடகத்துறையில் கலாநிதிப் பட்டத்திற்கான உயர் ஆய்வினை இங்கிலாந்தின் Sheffield ஹாலம் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றார்.

ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் புனிதவளன் கத்தோலிக்க அச்சகத்தின் முகாமையாளராகப் பணியாற்றிய அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை, பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் கல்விசார் செயற்பாடுகளுக்கான இணைப்பாளராகக் கடந்த பல வருடங்களாகப் பணியாற்றி வருகின்றார்.

யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களின் நினைவாக, Bishop Savundram Media Centre என்ற பத்திரிகையியல் கல்வி நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் 2000ம் ஆண்டில் உருவாக்கி இன்றுவரை இயக்கியும் வருகின்றார். இத்தகைய ஊடகவியல் பின்னணியில் இவர் எமக்கு வழங்கியுள்ள கனதியான நூல்களைப் பற்றிய தகவல்களை உள்ளே காணலாம். Pirasurakalam_5June2010

இவ்விதழில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் அனைத்தையும் ஒரு தொகுதியாக விற்பனை செய்ய அதன் ஆசிரியர் முன்வந்துள்ளார். எட்டு நூல்களையும் பெற விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம்: செல்வராஜா (0044) 07817402704 selvan@ntlworld.com Single copy £ 10.00 Set Price £ 60.00 (Postage included).

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *