ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளர் லியன் பஸ்கோ இன்று இலங்கைக்கு வரவுள்ளார். அவர் இரு நாட்கள் இலங்கையில் தங்கி இருப்பார்.
லியன் பஸ்கோ இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசுத் தரப்புப் பிரமுகர்களையும், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள், சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை நேரில் சந்தித்து அரசியல் நல்லிணக்கம், மனித உரிமைகள், அகதிகள் மீள்குடியேற்றம் ஆகியன சம்பந்தமாகப் பேசுவார் என்று ஐ. நா. அறிவித்துள்ளது.