கிளிநொச்சியில் சில பகுதிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளுக்கு விரைவில் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என வடமாகாண மின் அத்தியட்சகர் குகராஜ் தெரிவித்துள்ளார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் நிதியுதவியின் மூலம் மின்சாரம் விநியோகிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி. உருத்திரபுரம் கிழக்கு, பரந்தன், உதயநகர் மேற்கு, உதயநகர் கிழக்கு, கனகபுரம், கணேசபரம், திருநகர் வடக்கு, தொண்டமான் நகர். பாரதிபரம், ஆகிய கிராமங்களுக்கு  இன்னும் இரண்டு மாதங்களில் மின்சாரம்  வழங்கப்பட்டு விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளையில், மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இப்பகுதிகளில் போர் நடவடிக்கைகளால் அழிவடைந்த, சேதமுற்ற வீடுகள் இன்னமும் மீளமைக்கப்படாமல் மக்கள் இன்னமும் சிறு கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றமையும் இங்கு  குறிப்படத்தக்கதாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *