முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் இராணுவத்தளபதி நியமிக்கப்படவுள்ளார்.

Mullaitivu_Districtமுல்லைத் தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சி.ஆர்.டி.சில்வா நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக தற்போது கடமை புரியும் இமெல்டா சுகுமாரை அப்பதவியிலிருந்து விடுவித்து, வடமாகாணசபையில் அவருக்கு பிரதம செயலர் பதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Mullaitivu_Districtவடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்களாக முன்னாள் இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அரசஅதிபராக ஒரு முன்னாள் இராணுவத் தளபதி நியமிக்கப்படவிருப்பதான செய்தி தமிழ் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. வெலிஓயா, பதவியா, மகாவலி எச் வலயம் என்பனவற்றை உள்ளடக்கியதாக வன்னியில் அனைத்துப் பகுதிகளையும் சிங்கள மயமாக்கும் நோக்கத்துடன் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என தமிழ்மக்கள் பலருக்கு சந்தேகம் தோன்றியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *