வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் சிவில் நிர்வாக ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்படவுள்ளன.

Traffic_Police_SLவன்னியில் மீள் குடியேற்றப்பட்டுள்ள பகுதிகளின் போக்குவரத்து ஒழுங்குகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் இவ்வாரத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். வன்னியில் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும், சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வாகனங்களின் ஆவணங்கள் யாவற்றையும் வைத்திருக்க வேண்டும் என்று வீதிகளில் காவல் கடமைகளில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினர். வாகனப் பயன்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ள பகுதிகளில் சிவில் நிர்வாக நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் ஒரு கட்டமாக வாகனப் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகள் பேணப்படவுள்ளதாகவம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வன்னியில் இறுதிக்கட்டப் போரின் போது, பொது மக்கள் பலர் தங்கள் வாகன அனுமதிப்பத்திரங்கள் ஆவணங்கள் போன்றவற்றை இழந்துள்ளனர். தற்போது மீட்கப்பட்ட வாகனங்கள் சில  உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் அதன் ஆவணங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை  பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *