வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பிரித்தானிய அரசின் பாதுகாப்பு செயலாளர் டாக்டர் லியம் பெக்ஸிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளது. இதன் போது இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
இந்த உயர் மட்ட சந்திப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசிற்கும் பிரித்தானியாவின் புதிய அரசாங்கத்திற்கும் இடையிலான முதற் சந்திப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.