ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு ஏதுவாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கரும பீடமொன்று 2010 ஏப்பிரல் மாதம் 16ம் திகதி வெள்ளிக்கிழமை, 17ந் திகதி சனிக்கிழமை மற்றும் 18ந் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இயங்கவுள்ளது.
இக்கரும பீடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான முக்கியமான தகவல்களும் ஆவணங்களும் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளமையினால் இதற்கு சமுகமளிக்கும்படி உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் நுழைவதற்கு வசதியாக தமது அடையாள அட்டையை கொண்டு வரும்படியும் பாராளுமன்ற கட்டடத்துக்குள் வரும்போது உறுப்பினர் நுழைவாயிலை பாவிக்கும்படியும் உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.