எதிர்க்கட்சிகளின் தலைவராக சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு கோரிக்கை

sarath_fonseka-02.jpgமுன்னாள் அரச தலைவர் வேட்பாளர் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் தலைவர் பதவிக்கு நியமிக்கவேண்டும் என்று பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பெரும் பலத்துடன் நாடாளுமன்றுக்கு வரவுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுக்கு சவாலான அதேவேளை எதிராக செயற்படும் வலுவுள்ள தலைமை இன்றைய காலகட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மிக மிக அவசியமான ஒன்று. அந்த பதவிக்கு சரியான தெரிவு சரத் பொன்சேகாவாக மட்டுமே இருக்கமுடியும் என்று ஜனநாயக தேசிய முன்னணி எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

பொன்சேகா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி தேர்தலில் ஐந்து ஆசனங்களை மட்டுமே வென்றிருந்தன. அவர்களில் ஜே.வி.பி. சார்பில் விஜித ஜேரத், சுனில் கெந்துனெற்றி, அஜித் குமார ஆகியோரும் பொன்சேகா கொழும்பிலும் களுத்துறையில் அர்ஜுன ரணதுங்கவும் வெற்றி பெற்றிருந்தனர். மீள்வாக்கெடுப்பு நடைபெறவுள்ள கண்டியில் தமக்கு மேலும் ஒரு ஆசனமும் தேசிய பட்டியல் மூலம் ஒரு ஆசனமும் தமக்கு கிடைக்கும் என்று தேசிய ஜனநாயக முன்னணி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *