வவுனியா இரவு தபால் ரயில் கல்கமுவவில் தடம்புரண்டது

கொழும்பு கோட்டையிலிருந்து திங்கட்கிழமை இரவு வவுனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரவு தபால் ரயில் கல்கமுவவுக்கும் செனத்கமுவவுக்கும் இடையில் தடம்புரண்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு விலகியுள்ளது.

இச் சம்பவத்தால் பயணிகளுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும், திருத்த வேலைகள் நடைபெறுவதாகவும் ரயில்வே பகுதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச் சம்பவத்தால் நேற்று கொழும்பிலிருந்து வவுனியா அநுராதபுரம் நோக்கிச் செல்லும் ரயில்கள் கல்கமுவவரையும் நடைபெற்றன.

அண்மைக் காலங்களில் இந்தப் பாதையில் ரயில்கள் அடிக்கடி தடம்புரள்வதும் குறிப்பிடத்தக்கது. ஆங்கிலேயர் கால ரயில் பாதை அமைப்பே இதற்கு காரணம் எனவும், ரயில் பாதைகள் புனரமைக்கப்பட வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *