நாளை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதற்கு விசேட பேனாவை பயன்படுத்த தேர்தல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இதுவரை காலமும் நடைபெற்ற தேர்தல்களில் பென்சில் மூலமே வாக்காளர்கள் தமது வாக்கை (புள்ளடியிடுதல்) செலுத்திவந்தனர்.
பென்சில் மூலம் புள்ளடியிடுவதால், அந்த வாக்குச்சீட்டில் அதனை அழித்தும் வேறு மோசடிகளும் இடம்பெறுவதாக அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தல்கள் திணைக்களத்துக்கு முறையிட்டிருந்தன.அதனால் பேனா மூலம் புள்ளடியிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தன.
இதனையடுத்து பேனா மூலம் வாக்குச்சாவடியில் புள்ளடியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பென்சில் மூலம் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்டால் அது நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இம்முறை தேர்தலில் வாக்களிப்பவருக்கு விரலில் இடப்படும் மையின் நிறமும் வேறுபட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Ajith
Whatever the pen is used to mark the ballot , the final results (decision) is determined by the Indian software magicians employed by Rajapakse.