தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கருணாரத்ன பரனவிதான தமது பதவிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காகவே அவர் தனது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான அவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் பெட்பர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவராவார். இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே கருணாரத்ன பரனவிதான இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்.