ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்த மக்களுக்கும் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கும் தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனவரி 21ம் திகதி வரை தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை மறுத்த தேர்தல் திணைக்களம் சகல தரப்பினருக்கும் வாக்களிக்கத் தேவையான ஒழுங்குகளை தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி.சுமணசிறி கூறினார்.
சுமார் 88 வீதமான மக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதோடு, எஞ்சியவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவும் தற்காலிக அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிராம சேவகர்களினூடாக தற்காலிக அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கும் ஏனைய பிரதேசங்களில் உள்ள வாக்காளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.