குவான்டனாமோ கைதிகளை அடைக்க சிறைக்கூடத்தை விலைக்கு வாங்கியது ஒபாமா அரசு

கியூபாவின் குவான்டனாமோ சிறையில் இருந்து அமெரிக்கா கொண்டு வரப்பட்ட கைதிகளை அடைக்க இல்லினாய்ஸ் மாகாணத்தில் புதிய சிறைக்கூடம் ஒன்றை ஒபாமா அரசு விலைக்கு வாங்குகிறது.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரொபர்ட்உட்ஸ், ‘இல்லினாய்ஸில் உள்ள தாம்ஸன் சிறைக் கூடத்தை விலைக்கு வாங்குவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க சிறைக் கழகம் மேற்கொள்ள வேண்டும் என அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார் என்றார்.

குவான்டனாமோ சிறையில் இருக்கும் எத்தனை கைதிகள் இல்லினாய்ஸ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற விவரத்தை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை என்ற போதிலும் புதிய சிறைக் கூடத்தில் 100 கைதிகள் இருப்பார்கள் என இல்லினாய்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட்டர்பின் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவான்டனாமோ சிறையை நிர்வகித்த அதிகாரிகளே, இல்லினாய்ஸ் சிறைக்கூடத்தையும் நிர்வகிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *