பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹேய்ஸ், மற்றும் நோர்வே தூதுவர் டோர் ஹெட்ரம் ஆகியோர் இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று யாழ். குடாநாட்டுக்கு சென்றனர்.
இந்த விஜயத்தின்போது அவர்கள் இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளுட னும், யாழ். அரச அதிபர் உள்நாட்டு, வெளி நாட்டு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங் கள், ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் மற் றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊழி யர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து பேசுவர்.ஆணையிறவுக்கு செல்லும் அவர்கள் அங்கு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம் ஒன்றை பார்வையிடுவதுடன் யாழ்ப்பாணத்துக்கு அருகே உள்ள தீவுகளுக்கு சென்று அங்குள்ள மக்களையும் சந்திப்பார்கள்.