ஜனாதிபதி மஹிந்த சார்பில் நேற்று கட்டுப்பணம்

elc-2010.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக நேற்று (7) தேர்தல் செயலகத்தில் கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.

ஐ. ம. சு. முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் ஐ. ம. சு. முன்னணி சார்பாக நேற்று கட்டுப்பணம் செலுத்தியதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி தெரிவித்தார்.

ஏற்கனவே 7 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இது வரை 8 பேர் கட்டுப் பணம் செலுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 16 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் ஏற்கப்படவுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *