யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து கொழும்பு உட்பட அதன் சுற்றுப் புறங்களில் வசிக்கும் வாக்காளர்களுக்கு தாம் தற்காலிகமாக வசிக்கும் பகுதிகளில் வாக்களிக்க வசதி அளிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையாளருக்கு விண்ணப்பிக்குமாறு தேர்தல் திணைக்களம் கோரியுள்ளது. யாழ். தேர்தல் மாவட்ட வாக்காளர் இடாப்புக்கள் இன்று (3) முதல் வெள்ளவத்தை தபால் நிலையத்தில் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.