படகுகள் மூலம் சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட 69 பேரும் சி.ஐ.டியினரின் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவின்பேரில் காலி, பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ.எம். கருணாரட்ன தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள 69 பேரில் 63 தமிழர்களும், 6 சிங்களவர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.