மத்திய மாகாணப் பாடசாலைகள் மூடப்பட்டமை தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் மத்திய மாகாண முதல்வர் சரத் ஏக்கநாயக்காவிற்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. மத்திய மாகாணப் பாடசாலைகளை மூடிவிடும் அறிவிப்பு தொடர்பாக கல்வியமைச்சிடம் கலந்தாராயப்படவில்லை என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
பாடசாலைகளை மூடிவிடுவது தொடர்பான தீர்மானம் எடுப்பது தொடர்பாக மத்திய மாகாண முதலமைச்சர் பிரத்தியேகமான உரிமையை கொண்டிருக்கவில்லை என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
அதேசமயம் இந்த விடயம் தொடர்பாக மத்தியமாகாண முதலமைச்சருக்கு தான் அறிவிக்கவுள்ளதாகவும் கல்வியமைச்சர் கூறியுள்ளார். வைரஸ் காய்ச்சல் (பன்றிக் காய்ச்சல்) அச்சுறுத்தல் சாத்தியத்தையடுத்து நவம்பர் 23 தொடக்கம் டிசம்பர்9 வரை மத்திய மாகாணத்திலுள்ள அரசாங்க பாடசாலைகள் மூடப்படுமென மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா அறிவித்திருந்தார்.