தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

borella-protest.jpgஇலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கின்றது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் அழைப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு பொரளை மகசின் சிறைசாலைக்கு எதிரில் நடைபெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய சோசலிஸ கட்சியைச் சேர்ந்த சிறிதுங்க ஜயசூரிய, ஜனநாயக மக்கள் முன்னணியின் மாகாணசபை உறுப்பினரான என்.குமரகுருபரன் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பலரும் இதில் கலந்து கொண்டார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *