கொழும்பு பங்குச் சந்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் மொத்த விற்பனை சடுதியாக அதிகரித்திருந்தது. 711 மில்லியன் ரூபா பெறுமதியான பங்கு கையிருப்புகள் விற்பனை செய்யப்பட்டன. கொமர்ஷல் வங்கியின் பாரிய கையிருப்பு விற்கப்பட்டது. அமெரிக்காவை தளமாக கொண்ட முதலீட்டாளர் ராஜ் இராஜரெட்ணத்தால் விற்பனை செய்யப்பட்டதற்கான சாத்தியம் குறித்து இது தொடர்பாக சன்டே ரைம்ஸ் பத்திரிகையின் இணையத்தள சேவை நேற்று தெரிவித்தது.
வங்கியின் 3.5 மில்லியன் பங்குகள் 177 ஆக விற்பனை செய்யப்பட்டதாக தரகர்கள் தெரிவித்தனர். முன்னைய மட்டத்திலும் பார்க்க ரூபா 1.25 அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். பகல் 11.25 மணியளவில் சகல பங்குசுட்டிகளும் 0.63% மாக 2997.90 ஆக அதிகரித்திருந்தன. அதேசமயம் மைலங்கா 0.22 சதவீதத்தால் 3,401.53 ஆக அதிகரித்தது.
கொமர்ஷல் வங்கியிலுள்ள தனது கையிருப்பை இராஜரெட்ணம் விற்பனை செய்துள்ளார் என்பது ஊகம் என்று தரகர் ஒருவர் கூறியுள்ளார். இந்தப் பங்குகளை விற்றவர் அல்லது விற்பனை செய்தவர்கள் தொடர்பாக சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை. அமெரிக்காவில் பங்குச் சந்தையில் சட்டவிரோதமாக பங்குகளை வாங்கி விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை இராஜரெட்ணம் எதிர்நோக்கியுள்ளார்.