ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாடசாலை மற்றும் நிதியுதவி வழங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
விண்ணப்பங்கள் கிடைத்து மூன்று வார காலத்திற்குள் புதிதாக பாடசாலைகளை கேட்டுள்ளவர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை பூர்த்திசெய்ய கல்வி அமைச்சு எதிர்பார்க்கின்றது. புதிதாக பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்றோர்கள் அதிபர்களிடம் சமர்பிக்கவேண்டிய கால எல்லை கடந்த 12 ஆம் திகதியுடன் பூர்த்தியடைந்துள்ளது. அந்த விண்ணப்பங்களை அதிபர்கள் உடனடியாக வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு பணித்துள்ளது. திங்கட்கிழமைக்குள் அவற்றை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு மேலும் அறிவுறுத்தியுள்ளது.