அவசரகால சட்டம் 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

parliament.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 95 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன.

பிதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை சமர்ப் பித்துப் பேசினார். தேசிய கூட்டமைப்பு,  மு.கா. எம்.பிக்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

ஐ.தே.க., ஜே.வி.பியினர் சபையில் இருக்கவில்லை. பாராளுமன்றம் இம் மாதம் 17 இல் மீண்டும் கூடும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *