வடக்கில் இடம்பெயர்ந்து பெற்றோர், உறவினர், அரவணைப்பில்லாத சிறுவர்களை முழுமையாகப் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகளை நீதி, சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி மேற்கொண்டுள்ளார்.
இதுவரை 400 சிறுவர்களைப் பொறுப்பேற்றுள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் எஞ்சிய 600 பேரின் விபரங்களைத் திரட்டி வருவதாகத் தெரிவித்தார். இதற்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 13ம் திகதி செட்டிக்குளம் நிவாரண இடைநிலை கிராமங்களுக்குச் செல்வதாகவும் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி குறிப்பிட்டார்.