முன்னாள் எம்.பிக்களான மறைந்த டப்ளியு. எம். ராஜாவெலேகம மற்றும் எச். பி. வன்னிநாயக்கா ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணை மீதான உரைகள் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.
இந்த அனுதாபப் பிரேரணைகள் மீதான உரைகளைச் சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா ஆரம்பித்து வைத்தார். இந்த அனுதாப பிரேரணைகளில் எதிர்க் கட்சி பிரதம கொறடா ஜோசப் மைக்கல் பெரே ராவும் உரையாற்றினார்.