ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் நேற்று (1) அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர். இவர்களில் வடமேல் மாகாண முன்னாள் மு. கா. உறுப்பினரும் புத்தளம் மாவட்ட மு. கா. அமைப்பாளருமான எஸ். எச்.எம்.நியாஸ், ஆரச்சிக்கட்டு பிரதேச சபை மு. கா. உறுப்பினரும் மு. கா. அரசியல் அதி உயர் பீட உறுப்பினருமான எஸ். எம். எம். நஸார், ஆரச்சிக்கட்டு பிரதேச சபை முன்னாள் ஐ. தே. க. உறுப்பினர் கே. மகாலிங்கம், கீரியங்கல்லி மு. கா. முக்கியஸ்தரும் வர்த்தகருமான எம். மல்ஹா ஆகியோரும் அடங்குவர்.
முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸின் முன்னிலையில் நேற்று (1) அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.