மாநகர சபைகள் உட்பட உள்ளுராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான 100 ரூபாவுக்குக் குறைந்த மாத வாடகை கொண்ட வீடுகளை அவற்றில் குடியிருப்பவர்களுக்கு இலவசமாக சொந்தமாக வழங்க அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் சமர்ப்பித்திருந்தார்.
உள்ளுராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான வீடுகளில் பொது மக்கள் நீண்ட காலமாக வாடகைக்கு குடியிருக்கின்றனர். இந்த வீடுகளுக்கு 100 ரூபாவுக்கும் குறைவான தொகையே வாடகையாக செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான வீடுகளை குடியிருப்பவர்களுக்கே இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.