2010 ஆம் ஆண்டுக்கான பாட நூல் விநியோகத்திற்கான ஆரம்ப வைபவம் யாழ். வேம்படி மகளிர் மகா வித்தியாலயத்தில் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தெரிவித்தார்.
பிரதி கல்வி அமைச்சரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நாட்டில் இன்று காணப்படுகின்ற அமைதியான சூழல் காரணமாக ஏறக்குறைய 28 ஆண்டுகளின் பின் ஏ-9 ஊடாக மாணவர்களுக்கான இலவச பாடநூல்கள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ‘கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக பாரிய போக்குவரத்து செலவுடன் யாழ்ப்பாணத்துக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டன