முழுமையான வரவு- செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதில் தவறேதும் கிடையாதென அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
அரசாங்கம் அவ்வாறு ஓர் இடைக்கால கணக்கறிக்கையைச் சமர்ப்பித்தால், அதற்கான சகல சட்ட வழிகளும் உண்டென்று அமைச்சர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும்போதே பேராசிரியர் மேற்கண்டவாறு கூறினார்