இலங்கை கல்வி நிருவாகச் சேவையில் நிலவும் மூன்றாம் வகுப்பு தரத்திலான அதிகாரிகளின் வெற்றிடங்களுக்காக கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட நிமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்திருந்தார்.
இவ்வாறு 225 நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்குத் தகுதியானவர்கள் வரையறுக்கப்பட்ட மற்றும் பகிரங்கப் போட்டிப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 9 மாதகாலப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.