நிவாரணக்கிராமங்கள் – உறவினர்களை பொறுப்பேற்க புதிய விண்ணப்பபடிவம்

Wanni IDPsநிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்பதற்கு ஏதுவாக வவுனியா மாவட்டத்திற்கென புதிய விண்ணப்பப் படிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் மாதிரி விண்ணப்பப்படிவம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யுமாறு வவுனியா அரச அதிபர் திருமதி பீ.எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

விண்ணப்பப்படிவங்களை பொறுப் பேற்பதற்கென வவுனியா அரச அதிபர் அலுவலகத்தின் திட்டப் பணிப்பாளரின் அலுவலகத்துக்கு முன்னால் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் வழிகாட்டலு டன் அரச அதிபர் அலுவலகம் இப் புதிய விண்ணப்பப்படிவத்தை அறிமுகம் செய்துள்ளது.

வெளி மாவட்டங்களிலுள்ளவர்கள் முன்பு போன்றே விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *