கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புத் திட்டம் – வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தகவல்

260909house_new.jpgகிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டமொன்று அமைக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஏ.ஐ. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்  திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக மூன்று கோடியே 80 இலட்சம் ரூபா செலவு செய்யப்படவுள்ளன. நாடு பூராகவும் ஐயாயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் குடியிருப்பு வசதிகள் இல்லாதுள்ளனர். இவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *