மாவிலாறு முதல் புதுமாத்தளன்வரை: கொழும்பில் மாபெரும் கண்காட்சி – நினைவு முத்திரை ரூ. 1000 நாணய குற்றி வெளியிட ஏற்பாடு

பாதுகாப்புப் படையினர் மாவிலாறு முதல் புதுமாத் தளன் வரை நடவடிக்கை மேற்கொண்ட விதத்தையும், பிரபாகரனின் உடலைக் கண்டெடுத்ததையும் பொதுமக்கள் மீண்டும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் மூன்றாம் திகதி சனிக்கிழமை முதல் ஏழாந் திகதி புதன்கிழமை வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் கண்காட்சியிலேயே இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

இராணுவத்தின் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவிலாற்றில் இருந்து புதுமாத்தளன் வரை படை யினர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்து விளக்கும் காட்சிக் கூடங்கள் அமைக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினருக்கு ஆசிவேண்டி அநுராதபுரம் மகாபோதியில் நடைபெறும் பூஜையைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெறும்.

புலிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது படையினர் கைப்பற்றிய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதுடன் படையினர் பயன் படுத்திய ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இதேவேளை, படையினரை கெளரவிக்கு முகமாக நினைவு முத்திரையொன்றும் ஆயிரம் ரூபா நாணயக் குற்றியொன்றும் வெளியிட்டு வைக்கப்படுகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *