இலங்கை தமிழர் விவகாரம் குறித்து மன்மோகன் மற்றும் சோனியாவிடம் பேச்சு

இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை அவர்களது இருப்பிடங்களுக்கு செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பிரதமரை வலியுறுத்தியுள்ளனர்.

திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களே இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இந்தியாவின் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து நேற்று பேசியுள்ளார்கள்.

இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்வதாகவும், அதனை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர்கள் இந்திய பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *