7334 முதியோர் வெளியேற அனுமதி

வவுனியாவில் உள்ள மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் உட்பட இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள பல்வேறு முகாம்களில் இருந்து இதுவரையில் 7334 முதியவர்கள் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த முதியவர்கள் உறவினர்களிடம் செல்வதற்கும், உறவினர்கள் அல்லது உற்றார் இல்லாத முதியவர்கள் பலர் பல்வேறு முதியோர் இல்லங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வவுனியா மன்னார் வீதியில் சனசமூக சேவைகள் அமைச்சினால் நடத்தப்பட்டு வரும் முதியோர் இல்லத்திலும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *