வட இலங்கையின் தலைநகராக மாங்குளம்

இலங்கை யின் வடமாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதாக கூறுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இருப்பினும் மாங்குளத்தில் இருக்கக்கூடிய குடிநீர் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அதனை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தும் காணப்படுவதாகக் கூறினார்.

யாழ் மாவட்டத்துக்கு வெளியே வட மாகாணத்துக்கான தலைநகரை கொண்டு செல்வதற்கு அந்த மாவட்டத்தின் சனநெரிசல் போன்ற சில விடயங்களே காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *