இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதி அனுமதிகளை மீள் பரிசீலனை செய்யக் கோரிக்கை

இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனைத்து ஏற்றுமதி அனுமதி பத்திரங்களையும் பிரிட்டிஷ் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கேட்டிருக்கிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவ படைகளினால், பிரிட்டனில் இருந்து விநியோகிக்கப்பட்ட எந்த ஆயுதங்கள் அல்லது உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை பிரிட்டிஷ் அமைச்சர்கள் அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் காசாவில் 1300 பேர்கள் என்று மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையிலான பாலத்தீனர்கள் கொல்லப்பட்ட நடவடிக்கைகளின் போதும், இஸ்ரேலிய சிப்பாய்களால், பிரிட்டனால் விநியோகிக்கப்பட்ட உபரணங்கள் அநேகமாக பயன்படுத்தப்பட்டன என்றும் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *