அநுராதபுர மாவட்டத்தின் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது. கடந்த 13ம் திகதி மாலை ஆரம்பித்த மழை தொடர்ந்தும் மாலை வேளையில் இடிமின்னலுடன் பெய்து வருகிறது.
கடும் காற்றுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்ததால் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அநுராதபுரம் நிவந்தக சேத்திய விகாரைப் பகுதியிலுள்ள மரங்கள் உடைந்து வீழ்ந்ததால் மின் கம்பிகளுக்கும் சேதம் ஏற்பட்டது. இதனால் இவ்வீதி ஊடான போக்குவரத்தும் சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன.
தந்திரிமலை பகுதியிலுள்ள குடாஹல் மில்லவெவ, மஹஹல்மில்லவெவ கிராமங்களில் கடும் காற்றினால் பதினைந்து வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. மேலும் சுமார் இருபது வீடுகள் சிறு சேதங்களுக்கு உட்பட்டன. உடன்ஸ்தலத்துக்கு விரைந்த பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் டப்ளிவ் பீ. ஏக்கநாயக்க மற்றும் மத்திய நுவரகம பகுதியில் பிரதேச செயலாளர் ஜீ.ஏ. கித்சிரி ஆகியோர் சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட்டதுடன், இவர்களுக்கான நஷ்ட ஈடுகளை வெகு விரைவில் பெற்றுத்தருவதாக வாக்களித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க இப்பிரதேச விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இம்மழையினைத் தொடர்ந்து ரஜரட்ட பகுதி விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்திய காட்டு யானைகளின் தொல்லையும் வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்