கனமழையால் இடைத்தங்கல் முகாம் மக்கள் பாதிப்பு

flood.jpgஇலங் கையின் வடக்கே தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் இன்னும் சிரமங்களை அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென பெய்யத் தொடங்கியுள்ள மழை காரணமாக 21 ஆயிரம் பேர் முதலில் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது நிலைமைகள் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் மழையினால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் இன்னும் குறையவில்லை என்றே இடைத்தங்கல் முகாம்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன என நேற்றைய பீ.பீ.ஸி செய்தியரங்கத்தில் தெரிவிக்கப்பட்டது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *