காலி, ஹெயார பகுதியில் நேற்று முன்தினம் (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காலி, கராபிடிய வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி கொல்லப்பட்டார். கடமை முடிந்து வீடு திரும்பும் வழியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
பொலிஸ் பொறுப்பதிகாரி கே.பி. சுமனசிறி பயணித்த மோட்டார் சைக்கிளும் மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. பொலிஸ் பொறுப்பதிகாரி ஸ்தலத்தில் பலியானதோடு மற்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து கராபிடிய பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பொறுப்பதிகாரியின் பிரேத பரிசோதனை நேற்று (16) நடைபெற்றது. அவரது இறுதிக் கிரியைகள் இன்று (17) ஹெயாரயில் நடைபெறவுள்ளதாக கராபிடிய ஆஸ்பத்திரி பொலிஸார் கூறினர்.