கொழும்பு- கறுவாத்தோட் டம் பகுதியில் இரண்டு இளம் பெண்களின் சடலங்களை நேற்றுக் காலை (15) பொலிஸார் மீட்டுள்ளனர். பெளத்தாலோக மாவத்தையில் உள்ள வாகனத் தரிப்பிடத்தை அண்மித்த கழிவுக்கான் பகுதியிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து கறுவாத்தோட் டம் பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர். இரண்டு பெண் களும் சுமார் 20 வயது மதிக்கத்தக்கவர்களாக இருப்பதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இவ்விருவரும் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டுக் கொண்டு வந்து போடப்பட்டார்களா, அல்லது வாகனத் தரிப்பிடப் பகுதியில் கொல்லப்பட்டார்களா என்பதைப்பற்றித் தகல் வெளியாகவில்லை.
இந்தக் கொலைக்கான காரணத்தைக் கண்டறியவும், சந்தேக நபர்களைக் கைது செய்யவும் கறுவாத்தோட்ட பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.