உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாதென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் இடம்பெயர் மக்களை மீளக் குடியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடம்பெயர் முகாம்களில் தங்கியிருக்கும் பாடசாலை மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக இவர்களை வேறும் இடங்களுக்கு அழைத்துச் சென்றால் பரீட்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்கவும் சுட்டிக்காட்டியுள்ளார்.