உயர் கல்வி அமைச்சு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே டாக்டர் பட்டங்களை வழங்க முடியும் என உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை காலமும் டாக்டர் பட்டங்களை வழங்கி வந்த பத்து நிறுவனங்களுக்கு டாக்டர் பட்டங்களை வழங்கக் கூடாது என தடை விதிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் தலைமையில் பாராளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உபகுழுவின் பரிந்துரைகளுக்கு அமைய போலி டாக்டர் பட்டங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மட்டுமே டாக்டர் பட்டங்களை வழங்க முடியும் என்ற வகையில் சட்டம் உருவாக்கப்படவுள்ளது.