புனர் வாழ்வு முகாம்களிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களின் சிறுவர் போராளிகளை பெற்றோர்கள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகளையே பெற்றோர்கள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்தார்.
அத்துடன் இனம், மதம், அரசியல் என்ற வர்க்க வேறுபாடுகளை பொருட்படுத்தாது நாட்டின் அமைதிக்காக அனைவரும் பாடுபட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.