ஊவா மாகாண சபை மற்றும் யாழ், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி தெரிவித்தார்.
வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பட்டியலை வழங்குமாறு பதுளை, மொனராகலை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா அரச அதிபர்களிடம் கோரியுள்ளதாகவும், அதேவேளை, போனஸ் ஆசனங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்குமாறு கட்சித் தலைவர்களை கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளி யிடப்படவுள்ளது.