முஷாரபுக்கு எதிராக வழக்குப் பதிவு – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

musharap.jpgபாகிஸ் தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரபுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் அதிபராக முஷாரப் பதவி வகித்தபோது, 2007-ம் ஆண்டு அவசரகால நிலையை அமுல் செய்தார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகளை அவர் சிறையில் அடைத்தார். இவ்விதம் இரண்டு வாரகாலம் நீதிபதிகளை சிறையில் அடைத்தது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானதாகும். எனவே அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு பாகிஸ்தான்  நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

முஷாரப் தற்போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்லம் குமான் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அக்மல் ரஸா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Anonymous
    Anonymous

    அமரிக்கப் பையனுக்கு ஆபத்து காத்திருக்கோ?
    எல்லாம் சதி.

    Reply