இடம்பெயர்ந்த மக்களுக்கு அமெரிக்கா 15 மில்லியன் டொலர் பெறுமதியான உணவுப் பொருட்கள்

வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென 1.724 பில்லியன் ரூபா (15 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஐக்கிய அமெரிக்கா முன்வந்துள்ளது. இதற்கேற்ப யு. எஸ். எயிட் நிறுவனம், உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கவிருக்கின்றது.

மூன்று இலட்சம் மக்களுக்கு சுமார் நான்கு மாத காலத்துக்குத் தேவையான கோதுமை, அவரை வகைகள் மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகியன உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கப்பல் மூலம் இலங்கைக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் உலக உணவுத் திட்ட அமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *