பாராளு மன்றத்தைப் பார்வை யிட வருகை தரும் மாணவ ர்களுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டம் சபாநாயகர் டபிள்யு. ஜே. எம். லொக்கு பண்டார தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. தனியார் பால்மா கம்பனியொன்றின் அனுசரணையோடு இத்திட்டம் பாராளுமன்ற வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னர் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தரும் சகல மாணவ, மாணவியருக்கும் ஒரு கிளாஸ் பால் வழங்கப்படும்.
பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் ஒரு தனியார் கம்பனியும் ஏனைய நாட்களில் மற்றொரு கம்பனியும் பாடசாலை மாணவ மாணவியருக்கு இலவசமாக பால் வழங்க முன் வந்திருப்பதாக இத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும்போது சபாநாயகர் கூறினார். இவ்வைபவத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த்தும் கலந்துகொண்டார்.