4வது கட்ட நிவாரணப் பொருட்கள் கப்பல் கொழும்பு நோக்கி வருகிறது.

06-cargo-ship.jpgஇலங் கையில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களுக்கு தமிழக அரசின் 4வது கட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் கொழும்பு நோக்கி வருகிறது.

உணவு பொருட்கள், மளிகை, பிளாஸ்டிக் கேன்கள், செருப்புகள், குழந்தைகளுக்கான துணிகள், வேட்டி-சேலைகள் அடங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள இந்த பொருட்களை எம்.சி.பி. ஆம்ஸ்டர்டாம் என்ற கப்பல் மூலம் நேற்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கப்பல் நேற்று காலை 11.50 மணிக்கு சென்னை துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. 8ம் தேதி இது கொழும்பு வந்தடையும்.

இந்த நிவாரணப் பொருட்கள் இங்குள்ள இந்திய தூதரகம் மூலம், ஐக்கிய நாடுகள் சபை அமைப்பினரால் வன்னிதமிழர்களுக்கு வழங்கப்படும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *