இலங் கையில் போர் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது அதில் காயமடைந்த தமிழர்களுக்கு சிகிச்சையளிக்க 6 மாதங்களுக்கு முன் இந்திய ராணுவ டாக்டர்கள் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
அவர்கள் திருகோணமலை மாவட்டம் புல்மொட்டையில் தற்காலிக மருத்துவமனை அமைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
பின்னர் இந்த மருத்துவமனை வவுனியா மாவட்டம் செட்டிகுளத்துக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள அகதி முகாமில் தங்கியிருந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந் நிலையில் தங்களது பணிகள் முடிந்துவிட்டதால் இப்போது இந்தக் குழு இந்தியா திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.